எழுச்சி கவிஞரின் நச் கவிதை..

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.யூ.கே சொல்வது:

காலேஜ் சேர்ந்து முதல்வருடம் விடுமுறையில் நல்லா வெட்டியா சுத்திட்டு இரண்டாமாண்டில் காலெடுத்து வைத்தோம். அப்போது எங்களுக்கு தெரியாது. இனிமேல் நாங்கள் இப்படியொரு அற்புத(ப)மான ஜீவனுடன் மீதி காலத்தை ஓட்ட வேண்டுமென்று. அது வேறு யாருமில்லை எங்க தலை ஜமீன்தான். தலையைப் பத்திச் சொல்லணும்னா ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். பால்வடியும் முகம். ஆனால் அது பால்வடியும் முகமில்லை.. ஜிங்காரோ பீர் வடியும் முகம்னு போகப்போகத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த முகத்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் ஒரு கட்டை மீசைன்னு அம்சமா இருப்பார்னா பார்த்துக்கங்களேன்..

ஜமீனை முதன்முதலில் பார்த்த நம்ம காலேஜ் கவிஞர் தனக்கு தோன்றிய அந்த அற்புத வரிகளை கவிதையாக கொட்டியிருக்கார்.அவரது அனுமதியுடன் அந்த அற்புதமான கவிதை உங்கள் பார்வைக்கு..

ஒரு
கிங்ஸ்
கிங்ஸ்
புகைக்கிறதே....
- எழுச்சி கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம்

நம்ம கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம் சொன்னதுபோல் இப்படிதான் முதன்முதலில் காட்சியளித்தார் நம்ம தலை ஜமீன். முதலில் பார்த்ததும் சரி.. ஏதோ ஒரு ஸ்டூடண்டின் தம்பி போல...அதான் ஹாஸ்டல் ரூமில் உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன்.ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது.. அவர்தான் நம்ம தலை ஜமீன் அப்படிங்கறதும், எங்க எல்லோரையும் விட ரொம்ப உயர்ந்தவர்(வயசுல மட்டும்) அப்படிங்கறதும். வேற வழியில்லாமல் தலையை எங்கள் நண்பர் குழுவில் இணைச்சுக்கிட்டோ ம்.ஸாரி.. ஸாரி.. ரொம்ப பெரிய மனசு பண்ணி ஜமீன்தான் எங்களை அவரோட நண்பர்களா ஏத்துக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஜமீனுடனான இவ்வளவு கேவலமான அறிமுகத்துக்கு அப்புறம் அவருடன் தொடர்ந்து நடந்த,நடக்கும் இனிமையான நிகழ்வுகளை(கருமம்டா சாமி...) இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.