தீவுத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்



இதற்கிடையே இதுவரை வெளியான பதிவுகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை(!) தீர்ப்பதற்காக பொதுக்குழு கூட்டத்திற்காக கே.கே வும், என்.எஸ் ம் ஆபிஸிக்கு லீவ் போட்டுவிட்டு சித்தப்பூவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை STD யில் பிடித்தபோது....


யூ.கே: ஹலோ

கே.கே: சொல்றா.. அங்கே ஏதும் பிரச்சினையில்லையே...

யூ.கே: ** நீ பாட்டுக்கு சென்னையைவிட்டு ஓடினால் போதும்னு எஸ்ஸாயிட்டே.. இங்கே எந்த நேரத்துல எவன் வந்து அடிக்கப்போறான்னு தெரியாம பம்மிக்கிட்டிருக்கேன்.

கே.கே: விடுடா ஜமீன்லாம் ஒரு ஆளுன்னு பயப்படுறியே.. அதுவுமில்லாமல் உன் பேரை இதுவரைக்கும் எங்கேயும் சொல்லவேயில்லை.. அதனால் ஜமீனுக்கு நீதான் எழுதறேன்னு உன்மேல டவுட் வர சான்ஸே இல்லை.. சும்மா தைரியமா தூங்கு..

யூ.கே: அது சரிதான் மச்சி.. ஆனால் இப்போ போட்டேன் பாரு ஜுனியர் மேட்டர் பத்தி ஒரு பதிவு. அது எனக்கும்,ஜமீனுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு ரகசியம். இதைப்படிச்சா சத்தியமாய் நான் தான் எழுதினேன்னு கண்டுபிடிச்சுடுவான்..

கே.கே: டேய் யூ.கே... ஜமீன் என்ன பெரிய இவனாடா.. சரி ஒண்ணு பண்ணு.. நாளைக்கே ஜமீனை நேரிலே போய்பாரு.. முதல்ல கொஞ்சம் குதிப்பான். அப்படியே ரெண்டு ஜிங்காரோ பீரும், ஒரு சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு போனேன்னு வைச்சுக்கோ அப்படியே ஆஃப் ஆகிடுவான்.அப்படியே மப்புல அவன் வாயை கிண்டி இன்னும் கொஞ்சம் மேட்டரு தேத்திக்கிட்டு வா.. அடுத்த பதிவுக்கு யூஸாகும்..

யூ.கே: இப்போ பிரச்சினை ஜமீன் இல்லை.. புதுசா இன்னொண்ணு...

கே.கே: என்னதாண்டா பிரச்சினை.. விவரமா சொல்லித் தொலைடா..

யூ.கே: நம்ம வலைப்பூல கேப்டன் படத்தை வைச்சு காமெடி பண்ணியிருக்கோம்னு அவங்க கட்சிக்காரங்க நாளைக்கு தீவுத்திடல்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாங்களாம்.

கே.கே: சரி விடு அதுக்கு முன்னாலேயே நம்ம ஒரு பதிவைப்போட்டு நம்ம தரப்பு நியாயத்தை சொல்லிடலாம்.

யூ.கே: அப்புறம் நம்ம வலைப்பூக்கு ஆங்கிலத்துல தலைப்பு வைச்சிருக்கோமாம். அதுவுமில்லாமல் ஒரு வெளிநாட்டு மதுபானத்தை வேற பெருமையா சொல்ற மாதிரி எழுதறோமாம்.அதனால் உடனடியா வலைப்பூவையே பிளாக்கர்ல இருந்து தூக்கணுமாம்..

கே.கே: இப்படியெல்லாம் யாருடா சொன்னாங்க?

யூ.கே: நம்ம மருத்துவர் ஐயாதான்..

எதிர்முனை உடனே துண்டிக்கப்படுகிறது.

டேய் தம்பி.. உன்னைத்தான்...


ஜமீனுடனான அனுபவங்களை யூ.கே தொடருகிறார்

ஜமீனின் தைரியத்துக்கு உதாரணமான நிகழ்ச்சி..


அது காலேஜ் படைப்பின் கடைசி வருடம். விதியின் சதியால் நானும், ஜமீனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அது ஒரு வாரஇறுதியின் மாலைநேரம்.நானும் ஜமீனும் வழக்கமான டீக்கடையில் அமர்ந்து கிங்ஸ் புகைத்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு ஜுனியர் மாணவன் டீக்கடையோடு இணைந்திருந்த பைக் ஸ்டேண்ட்டில் பைக்கை நிறுத்த வந்தான்.அவன் ஜமீன் டிபார்ட்மெண்ட்(முக்கியமாக ஜமீனுக்கு ஜூனியர்). அவன் நாங்கள் உட்கார்ந்திருந்ததை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. யாரோ அமர்ந்திருப்பதுபோல் அவன் தான்வந்த வேலையைப் பார்க்க ஸ்டேண்டினுள் சென்றான். எனக்கு அதுகூட பெரிதாக தோன்றவில்லை. அவன் எங்களைக் கடக்கும்போது ஜமீனைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டுச் சென்றான். என்னத்தான் அவன் ஜமீனைத்தான் பார்த்தாலும் கூட அது என்னையும் அவமானப்படுத்தியது போலிருந்தது.(பின்னே இருக்காதா.. ஜமீனும்,நானும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லவா?)

ஜமீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இதோ:

நான்: ஜமீன்! அவன் உங்க ஜுனியர்தானே..

ஜமீன்: ஆமாடா.. அதுக்கென்ன..

நான்: இல்லை.. சீனியர் ஒருத்தன் இங்கே உட்கார்ந்திருக்கே.. கொஞ்சம்கூட மரியாதை கொடுக்காமல் அவன்பாட்டுக்கு போறான்?

ஜமீன்: இப்ப அதுக்கென்னடா பண்ணலாம்கிறே?

நான்: இல்லை.. நானாவது வேறு டிபார்ட்மெண்ட். பரவாயில்லைன்னு விட்டுடலாம். ஆனால் நீ அவனோட டிபார்ட்மெண்ட் சீனியர். உன்னையே மதிக்காம போறானே?

ஜமீன்: ம்.. ம்.. (புகையை ஆழமாக இழுத்து விட்டபடியே ஏதோ தீவிரமாக யோசிக்கிறார்)

(இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த மாணவன் என்னத்தான் ஜுனியர் என்றபோதிலும் கூட வயதில் எங்களைவிட மூத்தவன்.பார்ப்பதற்கும் நல்ல வாட்டசாட்டமாக இருப்பான்.காலேஜ் ரவுடிகள் கூட்டத்தில் அவனும் இருந்ததாக ஞாபகம்.சாதாரணமாக பேசும்போதே கொஞ்சம் திமிருடன் பேசும் டைப். எதற்காக இவ்வளவு பில்ட்-அப் என்பது பின்னால் உங்களுக்கே தெரியும்)

இப்போது அவன் எங்கள் முன்னால் திரும்பியபடி நின்று கடைக்காரரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஜமீன் அந்த ஜுனியரை அழைக்கிறான்.

ஜமீனுக்கும், ஜூனியர் மாணவனுக்கும் நடந்த உரையாடல் இதோ:

ஜமீன்: டேய்!...

ஜுனியர்: (காதில் வாங்காமல் தொடர்ந்து கடைக்காரரிடம் பேசுகிறான்)

ஜமீன்: டேய் தம்பி.. உன்னைத்தான்...

ஜூனியர்: (இந்தமுறை திரும்பிப்பார்த்து ஜமீனைத்தவிர எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிவிடுகிறான்)

இதைக்கண்ட நான் ஜமீனைப் பார்த்து ஏளனப் புன்னகை பூக்க, அவ்வளவுதான் ஜமீனுக்கு கோபம் வந்துவிட்டது.

ஜமீன்:டேய்.. உன்னைத்தாண்டா.. காது செவிடா?

ஜூனியர்: யாரை என்னையா கூப்பிட்டே?

(அவன் ஜமீனை ஒருமையில் கூப்பிட்டபோதே எனக்குள் எங்கோ பல்பு எரிய ஆரம்பித்தது.சரி நமக்கு எதுக்கு வம்பு என பெஞ்சின் இன்னொரு முனைக்கு மெதுவாக நகர ஆரம்பித்தேன்)

ஜமீன்: ஆமாண்டா.. உன்னைத்தான் கூப்பிட்டேன்.

ஜூனியர்: என்னது டா.. வா? என்னைத் தெரியுமா உனக்கு? இல்ல உன்னைத்தான் எனக்கு தெரியுமா? என்றபடியே லேசாக முறைத்துப் பார்த்தான்.

ஜமீன்: ஏண்டா.. சீனியருக்கு மரியாதை கொடுக்கமாட்டியா? நீ பாட்டுக்கு போறே?

ஜூனியர்: யார்டா சீனியர்? எதை வைச்சு சொல்றே?

ஜமீன்: நான்தாண்டா.. இப்பத்தான் டிபார்ட்மெண்டுக்குள்ளேயே வந்திருக்கே.. அதுக்குள்ளே இவ்வளவு திமிரா உனக்கு?

ஜுனியர்: டேய் தம்பி.. நீ சீனியர்னா அதைக் காலேஜோட வைச்சுக்கோ.. தேவையில்லாமல் பேசிக்கிட்டிருக்காதே..

ஜமீன்: (கொஞ்சம்கூட அசராமல்) உன்னையெல்லாம் முதல்நாளே தட்டி வைச்சிருக்கணுண்டா.. இவ்வளவு நாள் விட்டுவைச்சேன் பாரு என்னைச் சொல்லணும்..

ஜுனியர்: சின்னப்பயலா இருக்கியேன்னு பார்க்கறேன்.. ** ஒரு அடிக்கு தாங்குவியாடா நீ..

ஜமீன்:டேய் என்னைப்பத்தி உனக்கு தெரியாது.. காலேஜீக்குள்ளே வந்துபாருடா நீ வைச்சுக்கறேன்..

ஜுனியர்: என்னடா செய்யப்போற.. இங்கேயே செய்டா பார்க்கலாம்.

ஜமீன்: வேண்டாம் தம்பி.. ஓவரா போறே.. நல்லாயில்லை..

ஜுனியர்: மறுபடியும் தம்பி கிம்பின்ன அடுத்த வார்த்தை பேச வாயிருக்காது ஆமாம்..

உடனே தம்மை கீழேபோட்டு வேகமாய் எழுந்தவன், படாரென அவனை அடிக்க கையை ஓங்க, பதிலுக்கு அவனும் ஓங்க நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரர் இடையில் புகுந்து கெஞ்சிக் கேட்டதன் பேரில் ஜமீன் அடிவாங்காமல் தப்பித்தார்.

அவன் ****** ,****** என திட்டியபடியே அங்கிருந்து நகன்றபின் மெதுவாக ஜமீன் அருகில் சென்றேன்.

(இவ்வளவு நேரம் என்னடா செய்தேன்னு யோசிக்கிறீங்களா? நான்பாட்டுக்கு ஆர்வக்கோளாறுல களத்தில குதிச்சிருந்தேன்னா ரத்தம் பார்க்காம அடங்க மாட்டேனப்பு.. ஆனால் அந்த ஜூனியரை பார்த்தால் எனக்கு ஏனோ சண்டை போடவே தோணலை)
(ஸ்.... அப்பாடா... நம்ம கேரக்டரை நியாயப்படுத்திக்க என்னவெல்லாம் பில்ட்‍‍அப் கொடுக்க‌ வேண்டியிருக்கு... முடியலடா சாமி...)

நான்: ஏன் ஜமீன்.. எதுக்கு இப்படி நடந்துக்கிட்டே? என்றேன் ஒன்றுமே தெரியாதபடி..

ஜமீன்: *********** அவனுக்கு இருக்குடா.. திங்கட்கிழமை காலேஜிக்குள்ளே வரட்டும் வைச்சுக்கறேன்..

நான்: சரி விடுடா ஜமீன்...

ஜமீன்: இல்லடா நம்ம கடையாச்சேன்னு பார்த்தேன்.. வேற எங்கேயாவது சிக்கியிருந்தான்னா அவனை *******

நான் இன்னும் ரெண்டு கிங்ஸை வாங்கி பற்றவைத்து ஜமீனின் கோபத்தை குறைத்தேன்.

ஜமீன்: மாப்ளே....

நான்: சரி ஜமீன்.. புரியுது.. வழக்கம்போல இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லவேண்டாம்.. அதானே.. கவலையை விடு.. யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்.

அதன்பின் முதல்முறையாக இப்போதுதான் அந்தவிஷயத்தை பற்றி வெளியே சொல்கிறேன்


நான் சொல்லவந்த விஷயம் ஜமீனின் தைரியத்தைப் பற்றி.. கரெக்ட்.. ஆங்.. அது காலேஜீம் கிடையாது.. சப்போர்ட்டுக்கு ஆளும் கிடையாது. எதிர்த்து நிக்கறவன் ரெண்டு அடி அடிச்சுட்டானா திருப்பி அடிக்கவும் முடியாது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் யோசிக்காமல் நம்ம தலை ஜமீன் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு களத்தில குதிச்சிடுவாரு.. ஆனால் அடிமட்டும் வாங்காமல் எஸ்ஸாகிடுவாரு.. அதான் ஜமீனோட திறமை..
ஜிங்காரோ ஜமீன்