வ.வா.சங்கத்துக்கு ஓர் எச்சரிக்கை...

இதுவரை வெளிவந்திருக்கும் பதிவுகளினால் கடும் கோபமுற்ற சிலர் வன்முறையைக் கையாண்டும் கூட, நாங்கள் சிறிதும் அஞ்சாததால் இப்போது வ.வா.சங்கத்தின் துணையோடு எமது வலைப்பூ தளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளனர். எனினும் நமது நண்பர்களின் உதவியால் வலைப்பூ மீண்டும் சீர் செய்யப்பட்டது. அதனாலேயே இரு நாட்களாக இந்த சிறு தடங்கல். மேலும் எங்கள் வலைப்பூவிற்கு எதிராக உலகமெங்கும் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனன. அது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.மேலும் ஜமீன் எங்களுக்கு எதிராக மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் ஜமீனின் கதையை இப்போது தொடர முடியவில்லை. மாற்று ஏற்படாக ஜமீனின் நெருங்கிய நண்பரும், காலேஜ் பெருசுமான மச்சியின் மொக்கை வரலாறு அடுத்த பதிவிலிருந்து தொடங்கும்.

ஏன் இந்தப் பிரச்சினையில் வ.வா.சங்கத்தை இழுக்கிறோம் எனில், தலை ஜமீனுக்கு பிளாக் என்றால் என்ன? என்பதையே இரு நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் இது ஒரு கூட்டுசதி என உறுதியாக அறியமுடிகிறது.
மேலும் 2 நாட்களூக்கு முன் ஜமீனை வ.வா.சங்கத்தில் பார்த்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.