கொலைமிரட்டலுடன் எழுதிய பதிவு

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.கே.கே சொல்வது:

நம்ம யூ.கே சொன்ன மாதிரிதான் எனக்கும் ஜமீனுடனான முதல் சந்திப்பும். பார்ப்பதற்கு ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். ஆனால் அந்த முகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத ம.பொ.சி மீசை என பெரும் காமெடியனாய் காட்சியளித்தார்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது.

காலேஜில் அவரது உயிர் நண்பர் ஏழரையடி ஏகாம்பரத்துடன், நாலரையடி ஜமீன் இனைந்து கூச்சப்படாமல் (ரொம்பவே கஷ்டப்பட்டு) அவரின் தோளில் கையைப் போட்டவாறு தம் அடிக்க செல்லும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

ஜமீனிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரோட ஆளுமைத்திறன். அது எப்படின்னா ஹாஸ்டல்ல இருந்து 4பேர் சேர்ந்து கடைக்கு போனாங்கன்னா கூட சேர்ந்துக்குவார். அங்கே கடையில் நாட்டாமை ரேஞ்சுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களை பார்த்து ஒரு அதிகார தோரணையோடு இரு விரல்களை V வடிவில் சமிக்ஞை செய்து தம்மை வாங்கிக்கொண்டு வந்து கையிலே தரச்சொல்வார். ஆனால் நமது நண்பர்களோ ஏதும் அறியாதவர்கள் போல் வந்த வேலையைக் கவனிக்க, கடைசியில் நம்ம தலை "பொல்லாதவன்" கருணாஸ் ரேஞ்சுக்கு "ஏ நீ வாங்கேன்..ஏ நீ வாங்கேன்.." என்று கெஞ்சியும் கூட ஒன்றும் நடக்காததால் கடைசியில் தானே வாங்கி அடித்தாலும் கூட கடைசி வரைக்கும் தனக்கே உரிய கெத்தை விட்டுத்தராமல் புண்பட்ட நெஞ்சை சூனாப்பானா வடிவேல் ரேஞ்சுக்கு புகையைவிட்டு ஆத்துவார்.

(இதோ இப்போது இந்தப் பதிவை டைப் செய்துக் கொண்டிருக்கும்போது கூட மர்ம நபர் ஒருவர் இதுவரை வெளியான பதிவுகளை நீக்குமாறும், இனியும் பதிவுகளைத் தொடராமல் இருக்கும்படியும் மீறினால் கூலிப்படையை ஏவி தாக்கப் போவதாகவும் சற்று முன்னர்தான் டெலிபோனில் கொலைவெறியுடன் பேசினார். ஆனால் பாவம் அந்த முகம் தெரியாத நண்பருக்கு தனது மிரட்டல் உரையாடல முழுவதும் பதிவு செய்யப்படும் என தெரிய வாய்ப்பில்லை. வலைப்பூ நண்பர்களுக்காக அந்த டெலிபோன் உரையாடல் இதோ முழுமையாக.)

Mr.கே.கே: ஹலோ.....
ம.நபர் : நான் யாருங்கறது இருக்கட்டும்.. ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.கே.கே: என்ன பிளாக்குங்ண்ணா.. புரியலையே..

ம.நபர்: ஏ ******* ஜிங்காரோங்கற பேருல ஏதோ எழுதறியாமே?

Mr.கே.கே: ஜிங்காரோவா? என்ன சொல்றீங்க? சத்தியமா புரியலை..

ம.நபர்: எல்லாம் எனக்கு தெரியும் தம்பி.. சொல்லவேண்டியவங்க சொன்னாங்க..

Mr.கே.கே: யாருண்ணா? என்ன சொன்னாங்க?

ம.நபர்: கடைசியா நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன். மவனே ஜிங்காரோ ஜமீன்ங்கற பேருல ஏதாவது எழுதுனீங்கண்ணு தெரிஞ்சது தொரத்தி தொரத்தி அடிப்பேன். மீறி எழுதுனேன்னா அடுத்த பதிவுபோட அந்த கை இருக்காது தெரிஞ்சுக்கோ.. டேய் ** இன்னொருத்தன் இருப்பானே? போனை அவன்கிட்ட குடுடா..

(Mr.கே.கே சற்றே உதறலெடுத்தாலும் கூட சமாளித்து பேசியபடி Mr.யூ.கே விடம் போனை தருகிறார்.Mr.யூ.கேவுக்கும் உள்ளுக்குள் உதறலெடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுகிறார்)

ம.நபர்: என்னடா ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.யூ.கே: பிளாக்குன்னா என்னங்ண்ணா? சத்தியமா எனக்கு தெரியலை.. முதல்ல பிளாக்குன்னா என்னன்னு சொல்லுங்க.. மேற்கொண்டு பேசுவோம்.
( இதை கேட்டவுடன் சட்டென்று அமைதியான எதிர்முனை அப்படியே உரையாடலை துண்டிக்கிறது)

இருந்தபோதும் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியபடி அஞ்சாநெஞ்சன்களான இந்த வெட்டிப்பசங்க எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம் என கூறிக்கொள்கிறோம்


பின்குறிப்பு: மேற்கண்ட கொலைமிரட்டல் குறித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்து எடுக்கப்படும் முடிவு விவரமாக அடுத்த பதிவில் -Mr.கே.கே.

2 பேரு ஏதோ சொல்லியிருக்காங்க‌...:

  • Santhosh said...
     

    நல்லா ஷோக்கா எழுதறீங்க.. கலக்குங்க.. ஒரே ஒரு சஜசன். ஜிகே, யூக்கே அப்படின்னு எழுதுவதறகு பதிலாக ஒரு பெயரை வைத்து எழுதினால் படிப்பவர்களுக்கு ஒரு சுவாரிஸ்யம் இருக்கும்.. பாலோ பண்ண ஏதுவாக இருக்கும்.. அம்முட்டு தேன்..

  • ஜிங்காரோ ஜமீன் said...
     

    //ஒரே ஒரு சஜசன். ஜிகே, யூக்கே அப்படின்னு எழுதுவதறகு பதிலாக ஒரு பெயரை வைத்து எழுதினால் படிப்பவர்களுக்கு ஒரு சுவாரிஸ்யம் இருக்கும்.. பாலோ பண்ண ஏதுவாக இருக்கும்.. அம்முட்டு தேன்..//


    ஆதரவுக்கு நன்றி சந்தோஷ். இனிவரும் பதிவுகளில் இதை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்.