ஏண்டா.. வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்? சித்தப்பூ மீண்டும் டென்ஷன்...

வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்):
ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.

0 பேரு ஏதோ சொல்லியிருக்காங்க‌...: